அம்பிகா அம்பாலிகா ரெண்டு பேரையும் ஒரே நேரத்துல டபுள் மேரேஜ் பண்ண அஸ்தினாபுரத்து மன்னன் விசித்ரவீரியன், ஒரே நேரத்துல ரெண்டு பர்ஸ்ட் நைட் முடிக்கிறத நினைச்சு over excitement ஆனானோ என்னவோ, திடீர்ன்னு மயங்கி விழுறான். கொண்டுபோயி ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்றாங்க.
ஆஸ்பத்திரிக்கு ரெகுலர் விசிட் அடிக்கிறதால, டாக்டர்ஸ்க்கு அவன் நிலைமை தெரியும். எவ்வளவோ மருந்து குடுத்தும் பிரயோஜனம் இல்லாம, மயக்கம் தெளியாமலே மண்டையப் போட்டுட்டான்.
அஸ்தினாபுரத்து மன்னனுக்கு வாரிசு இல்லாமப் போச்சே. என்ன செய்றது? வாரிசு இல்லைன்னு தெரிஞ்சாலே பக்கத்து நாட்டுக்காரன் படையெடுத்து வருவான். ஆனா இங்க பீஷ்மனுக்கு பயந்துட்டு ஒருபய வரமாட்டான். ஆனா வாரிசு வேணுமே? என்ன பண்றது?
ஜெயலலிதா கால்ல விழுந்து மந்திரியா இருந்த அம்புட்டுபேரும் அந்தம்மா போய்ச் சேர்ந்தவுடனே சசிகலா கால்ல விழுந்தமாதிரி, அஸ்தினாபுரம் அமைச்சர்களுக்கு அடுத்து யார் கால்ல விழணும்னு தெரியல. மன்னன் விசித்ரவீர்யன் போய்ச் சேர்ந்துட்டான். பீஷ்மன் நாடாள மாட்டான். மன்னனுக்கு வாரிசுமில்லை. கல்யாணம் பண்ண கையோட போய்ச் சேர்ந்துட்டான். இனி என்ன நடக்குமோ அப்பிடின்னு அவங்க ஒருபக்கம் புலம்புறாங்க.
இன்னொரு பக்கம், அந்த விசித்ரவீர்யன் ரெண்டு கல்யாணம் பண்ணிட்டு அவம்பாட்டுக்கு போயி சேர்ந்துட்டான். இனி எங்க கதி என்னன்னு அம்பிகாவும், அம்பாலிகாவும் புலம்புறாங்க. தங்களைத் தூக்கிட்டு வந்த பீஷ்மன் மேல இவங்களுக்கும் கடுப்பு ஏறுது. இந்த பீஷ்மன் பயலால அம்பா வாழ்க்கையும் போச்சு. அம்பிகா வாழ்க்கையும் போச்சு. அம்பாலிகா வாழ்க்கையும் போச்சு. ***********
இப்பிடி எல்லாரும் புலம்பித் தவிச்சபிறகு, சத்யவதி பீஷ்மனைக் கூப்பிட்டு பேசுறா. நியாயப்படி பீஷ்மன் சாந்தனுவோட மூத்த மகன். அவன் தான் நாடாளணும். ஆனா அவன் சத்யவதி அப்பனுக்கு சத்தியம் பண்ணி குடுத்ததால அதை மீறாம இருக்கான்.
படகு அக்கறை நோக்கி போயிட்டே இருக்கு. சத்யவதி படகு ஓட்டுறா. பராசர முனிவனோ அவன் பார்வைய சத்யவதி மேல ஓட்டுறான். அவளும் கண்டுக்காம படகு ஓட்டுறா. அவ அழகுல ரொம்பவே அப்செட்டாகிப் போன பராசரன், தன்னோட "தவ ஒளி"ய சத்யவதி மேல இறக்குறான். உடனே ஒரு குழந்தை சத்யவதி மடில விழுந்து "ஹாய் மம்மி... நாந்தான் வியாசன்" அப்பிடின்னு சொல்லுது. (இந்த விசயம் சாந்தனுவுக்குத் தெரியுமா?)
(டியர் முனிவர்ஸ்.. இதுக்கா ஐம்புலன்களையும் அடக்கி தவம் பண்ணீங்க? சராசரி மனுசனை விட படுகேவலமா இருக்கீங்களே!)
காரியம் முடிஞ்ச உடனே எஸ்கேப் ஆகுறது சாதாரண ஆம்பளை மட்டுமா? பராசர முனிவனும் தான். அக்கறையில இறங்குன உடனே தல எஸ்கேப்.
"அம்மா, நான் தவம் பண்ணப் போறேன். நீ என்னை எப்ப கூப்பிட்டாலும் நான் வருவேன். இப்ப நான் போயிட்டு வரேன்"னு கைக்குழந்தை வியாசன் பேசிட்டு தவம் பண்ணப் போயிடறானாம். (கைக்குழந்தை எப்பிடி பேசும், எப்பிடி தவம் பண்ணும்னு லாஜிகல் கொஸ்டின் எல்லாம் கேக்கப்படாது)
*********** இந்த பிளாஷ்பேக் ஞாபகத்துக்கு வந்த உடனே சத்யவதிக்கு ஒரு ஐடியா. எப்பிடி பராசரன் தன்மேல "தவ ஒளி"ய இறக்கி வியாசனைப் பெத்தேனோ, அதேமாதிரி இந்த வியாசன் அவனோட "தவ ஒளி"ய நம்ம மருமகள்கள் மேல இறக்கி அவங்களும் குழந்தை பெத்துக்கிட்டா வாரிசுப் பிரச்சினை தீர்ந்ததே? (வாழ்க தவஒளி)
எவ்வளவு சுலபமா பிரச்சினைய தீர்க்குறா இந்த சத்யவதி? இந்த யோசனை வந்தவுடனே வியாசனை நினைக்கிறா சத்யவதி. நினைச்சவுடனே "ஹாய் மம்மி"ன்னு வந்து நிக்குறான் வியாசன். "மவனே வியாசா, இந்த அஸ்தினாபுரம் நாட்டை ஆள வாரிசு இல்ல. எப்பிடி பராசரன் "தவஒளி"ய என்மேல இறக்கி நீ பிறந்தியோ, அதேமாதிரி நீயும் உன் "தவஒளி"ய என் மருமகள்கள் மேல இறக்கி அவங்களுக்குப் பிள்ளைவரம் குடு"ன்னு சொல்றா சத்யவதி.
"நோ.. நான் ஒரு முனிவன்"னு முதல்ல ஷாக் ரியாக்சன் குடுத்த வியாசன், அப்புறம் சரின்னு சம்மதிக்குறான் (அவனும் ஆண்தானே?) "சரி சரி, நீ ரூம்ல போயி வெயிட் பண்ணு. நா வரிசையா ரெண்டு மருமகள்களையும் அனுப்புறேன்"னு சொன்ன சத்யவதி முதல்ல அம்பிகாவ அனுப்புறா. அவ போயிட்டு வந்து அடுத்ததா அம்பாலிகாவ அனுப்புறா. ரெண்டு பேரும் வெளில வந்தபிறகு, என்ன feedbackனு கேக்க வியாசனுக்காக வெயிட் பண்றா சத்யவதி. **********
ஒரு வழியா வியர்க்க விறுவிறுக்க வெளில வந்தான் வியாசன். சத்யவதி feedback கேக்க, "அம்மா, ஒருத்தி உள்ள வந்தவுடனே கண்ண மூடிட்டா. கடைசி வரைக்கும் கண்ண தெறக்கல. அதனால "தவஒளி" அவ கண்ணுல படலங்குறதால, அவளுக்கு கண் தெரியாத மகன் பிறப்பான்"னு முதல் குண்டைத் தூக்கிப் போடுறான். (அப்ப வாயையும் தான மூடியிருப்பா? ஏன் ஊமையா பிறக்கக்கூடாது? டவுட்டுதான்)
"இன்னொருத்தி உடம்பு மொத்தத்தையும் ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் சேலைய இழுத்துப் போர்த்தியே இருந்தா. அதனால அவளுக்கு உடம்பு வெளுத்துப் போன மகன் பிறப்பான்" அப்பிடின்னு ரெண்டாவது குண்டைத் தூக்கிப் போடுறான் வியாசன். வியாசன் இப்பிடி சொன்னவுடனே சத்யவதி கவலைப்பட்டு "வியாசா, இரு. இன்னொரு வாட்டி டிரை பண்ணுவோம். நீ திரும்பவும் ரூம்ல போயி வெயிட் பண்ணு"ன்னு சொல்லி ஒரு வேலைக்காரிய கூப்பிட்டு அவங்க ரெண்டுபேரையும் திரும்ப உள்ளாற கூட்டிட்டுப் போகச் சொல்றா.
ரூம் பக்கத்துல போன அவங்க ரெண்டு பேரும் திரும்பவும் உள்ளாற போக பயந்துக்கிட்டு, வேலைக்காரியவே வியாசன்ட்ட அனுப்புறாங்க. வந்திருக்குறது வேலைக்காரின்னு வியாசனுக்கு தெரியாது. அந்த "தவஒளி"க்கு அதெல்லாம் தெரியாது போல. வேலைக்காரி நல்லா கோவாப்பரேட் பண்ணதால "தவஒளி" இருக்கே... அது திவ்வியமாப் பரவுது. பரவுன பிறகுதான் வந்தது மருமகள் இல்ல, வேலைக்காரின்னு வியாசனுக்குத் தெரியுது. (நல்லா தவம் பண்ண போ)
வெளில வந்தான் வியாசன். "யம்மா, ஆள விடு. நான் பண்ண தவ வலிமை எல்லாம் போச்சு. இனிமே நான் புதுசா தவம் பண்ணி ரீசார்ஜ் ஏத்திக்கணும். இதுமாதிரி வேலைக்கு இனிமே என்னைய கூப்பிடாத. நா வரேன்"னு சத்யவதி கிட்ட சொல்லிட்டு எஸ்கேப் ஆனான் வியாசன். ***************
Write a comment ...