02

பரத வம்சம் - முதல் பாகம் 1

ராமாயணம், மகாபாரதம் இவையெல்லாம் உண்மையில் நடந்ததா இல்ல கட்டுக்கதையா? குகை மனிதன், மம்மோத் யானை இதெல்லாம் வாழ்ந்த தடத்தைக் கண்டுபிடிச்சாலும், அதெல்லாம் பெரிய விசயமே இல்லேங்கற மாதிரி, ராமன் பிறந்தது வாழ்ந்ததை எல்லாம் ஊகமா கண்டுபிடிச்சு நம்மாளுங்க தெறிக்க விடுவாங்க… நம்புனாத்தான் தொன்னையில பொங்கல் கிடைக்கும்னு நெனச்சி நம்பிக் கெட்டவய்ங்க தான் நம்ம முன்னோர்கள்…

மெய்ப்பொருள் காண்பதறிவு என்னும் வள்ளுவனின் வாக்கே துணை. கதைக்குள்ளாற போவோம்.
 — — — — — — — — — — — — — — — — — — — — — — — — 

மகாபாரதம்…. ஒரு முன்னோட்டம்

அதாகப்பட்டது…. திரேதாயுகத்தில் ராமன் வாழ்ந்திருக்கிறான். ராமாயணம் வால்மீகியால் எழுதப்பட்டது. கம்பர் தமிழில் மொழிபெயர்த்தார். ராமன் சூர்ய வம்ச வழித்தோன்றல்.

துவாபரயுகத்தில் பாண்டவர்கள், கவுரவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களது வாய்க்காத் தகராறே மகாபாரதமாக எழுதப்பட்டது. இயற்றியவர் வியாசர். வில்லிபுத்தூர் ஆழ்வார் தமிழில் மொழிபெயர்த்தார். பாண்டவ, கவுரவ அங்காளி பங்காளிகள் எல்லோரும் சந்திர வம்ச வழித்தோன்றல்.

இந்த சூரியன் சூரியகுடும்பத்தின் தலைமைக் கோள். சந்திரன் பூமியின் துணைக்கோள். இந்த வெங்காயம் எல்லாம் எங்களுக்கும் தெரியும். ஆனா.. சூரிய வம்சம்னா சூரியனின் வாரிசுகள், சந்திர வம்சம்னா சந்திரனின் வாரிசுகள்.

எப்பிடிப்பா? அது அப்பிடித்தான். சேர சோழ பாண்டியர் மூவரும் சூரியவம்ச வழித்தோன்றல்னு சொல்றதில்லையா? கள்ளர் மறவர் அகமுடையர் மூவரும் சூரியவம்சம்னு அவிங்க பெருமையா சொல்லிக்கிறதில்லையா? அப்பிடித்தான்…

அந்தக்காலத்தில், ஒட்டுமொத்த உலகமும் பாரதம் என்றே அழைக்கப்பட்டதாம். அடேங்கப்பா… அகண்ட பாரதமே இங்க இருந்து தான் ஆரம்பிக்குதா?
************

திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகளைக் கொண்டது. அந்த யுகத்தில், சூர்ய வம்சத்தில் தசரதன் மகன் ராமன் பிறக்கிறான். இந்த திரேதா யுகத்தின் தொடக்க நாளையே அட்சய திருதியை என்கிறார்கள். நம்ம மக்களுக்கு அதெல்லாம் தெரியாது. ஆனா அன்னிக்கு நகை வாங்குனா பெருகும்னு எவனோ கிளப்பிவிட்டத மட்டும் இவனும் நம்புவான்.

திரேதா யுகம் முடிந்து, துவாபர யுகம் தொடங்கும் சமயத்தில் பாரதத்தை சந்திரவம்சம் அல்லது பரதவம்சம் அல்லது குரு வம்சத்தவர் ஆளத் துவங்குகிறார்கள்.

(ராமன் ஆண்டது அயோத்தி, மகாபாரதம் அஸ்தினாபுரத்தில் துவங்குகிறது… பிறகு எப்படி முழு பாரதத்தை ஆண்டார்கள்னு கேள்வி வருதா? வரணுமே…)

துவாபர யுகத்தில் சந்திரன் என்பவன் “பாரதத்தை” ஆளத் துவங்குகிறான். அதனால் இது சந்திர வம்சம். சந்திரனின் வாரிசுப் படிநிலை…

- சந்திரன்
- புதன்
- புருரூவன் (ஊர்வசியின் புருசன்) (தேவலோக ஊர்வசி இங்க எங்க வந்தா? வந்துட்டா.. விடுங்க)
- ஆயு
- நகுடன்
- யயாதி
- புருரூவன் (இவன் வேற புருரூவன்)
- ஜனனேஜெயன்
- பிரசாவன்
- சாயதி
- சார்வபவுமன்
- அரிசிகன்
- மதிவான்
- திடன்
- நீலன்
- துஷ்யந்தன் (சகுந்தலை புருசன்)
- பரதன் (மகாபாரத பரதன்) (பரத வம்சம்)
- பவுமன்
- சுகோத்திரன்
- அஸ்தன் (இவனே அஸ்தினாபுரத்தை உருவாக்குகிறான். அப்போ அதுவரைக்கும் எங்க இருந்தாய்ங்க? எங்கயோ இருந்தாய்ங்க…)
- நிகும்பன்
- அரசமீளி
- வருணன்

- குரு (இந்த குரு ஆளும்போதே குரு வம்சத்தவர் என்றும் கவுரவர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவன் ஆண்டநாடு “குருவின் இடம்” அல்லது குருட்சேத்திரம் என்றும் அழைக்கப்பட்டதாம். தலைநகர் அஸ்தினாபுரம். அப்புறம் பாரதத்தை ஆண்டதாச் சொன்னது? தம்பி… கேள்வியெல்லாம் கேக்கப்படாது)

- பிரதீபன்
- சாந்தனு

சாந்தனுங்குற இந்த மெயின் கேரக்டர்ல இருந்து தொடங்குவோம்… டைரக்டர் பாக்யராஜ் கூட இவம்பேரைத் தான் மகனுக்கு வச்சிருக்கார். அப்பிடியென்ன சிறப்புன்னு பாத்துருவோம்.

ஸ்டாப்பு… பொங்கல் வாங்கித் தின்னுட்டு, போயிட்டு நாளைக்கு வாங்க…

Write a comment ...

Sankar Srinivasan

Show your support

Support me to contribute more.

Write a comment ...

Sankar Srinivasan

Certified Market Professional of National Stock Exchange of India