06

அம்பா அம்பிகா அம்பாலிகா - முதல் பாகம் 5

மகன் காங்கேயன் alias தேவவிரதனை (பின்னாடி பீஷ்மன்) கங்கம்மா கிட்ட இருந்து கூட்டிட்டு வந்து குருட்சேத்திர நாட்டு  இளவரசனாக்கிட்டான் மன்னன் சாந்தனு. அரண்மனையில வேலை வெட்டி எதுவுமில்ல. ஊர சுத்த ஆரம்பிச்சிட்டான் சாந்தனு. மனைவி கங்கம்மா ஞாபகமா கங்கையையே எவ்ளோ நாள் சுத்துறது? ஒரு சேஞ்சுக்கு யமுனை ஆத்துக்கு ஒருநாள் போறான்.
கங்கம்மா மாதிரி இங்க ஒரு யமுனாம்மா கிடைக்குதா பாப்போம்னு ஒரு நப்பாசை தான். ஆனா யமுனாம்மா வரல. சத்யாம்மா வர்றாங்க. அதாவது, யமுனை ஆற்றங்கரையில சத்யவதின்னு ஒரு மீனவப் பொண்ணைப் பாக்குறான். ரொம்ப நாளா காய்ஞ்சி போய்க் கிடந்த சாந்தனுவுக்கு, சத்யவதிய பாத்தவுடனே கல்யாண ஆசை வந்துருச்சி.
மன்னனாச்சேன்னு சத்யவதி சாந்தனு கிட்ட பேசுறா. சாந்தனு அவகிட்ட அவ அப்பன் டீடெயில்ஸ் எல்லாம் வாங்கிட்டு, நேரா அவ அவன் கிட்ட போயி சத்யவதிய பொண்ணு கேக்குறான். சத்யவதி டாடி பேரம் பேசுறதுல கில்லாடி.
"மன்னா,  உமக்குப் பிறகு உமது மகன் தேவவிரதன் மன்னனாகக் கூடாது. என் மகள் சத்யவதிக்குப் பிறக்கும் பிள்ளைதான் அரசாள வேண்டும். சம்மதம்னா மத்ததைப் பேசலாம்"னு சொல்றான் சத்யவதியோட அப்பா. "அடப் போய்யா, நீயும் உன் கன்டிசனும்"னு சொல்லிட்டு வந்துட்டான் சாந்தனு.
***********
வந்துட்டானே ஒழிய சத்யவதிய அவனால மறக்கமுடியாம மூட்அவுட் ஆகிட்டான். கல்யாண வயசுல மகன் தேவவிரதன் (பீஷ்மன்) இருந்தாலும்,  விசயம் தெரிஞ்சவுடனே நேரா சத்யவதியோட அப்பன்ட்ட போயி "உன் பேரனே நாடாளட்டும். நான் விட்டுக் குடுக்குறேன். உடனே எங்கப்பனுக்குக் கல்யாணத்த பண்ணு"ங்குறான். (நம்ம ஊர் அன்வர் ராஜா எம்.பி.க்கு அவர் பிள்ளைங்க தான் பேசி ரெண்டாவது கல்யாணம் பண்ணி வச்சாங்க. இத தினமலர்க்காரன் செம நக்கலடிச்சான்)
தேவவிரதன் சொன்னத முதல்ல அவனும் நம்பல. உடனே "எங்கம்மா கங்காதேவி மேல சத்தியமா நான் நாடாள மாட்டேன். நான் கல்யாணம் பண்ணா, என் வாரிசுகள் நாடாளும் போட்டிக்கு வருவாங்க. அதனால  நான் கல்யாணமே பண்ணமாட்டேன். இது சத்தியம்" அப்பிடின்னு சத்யவதி அப்பன் கையில அடிச்சி தேவவிரதன் சத்தியம் பண்றான்.
அப்போ தேவர்கள் எல்லாம் வானத்துல இருந்து தேவவிரதனை வாழ்த்தி "பீஷ்மன்"னு சொல்றாங்க. அப்ப இருந்து அவன் பீஷ்மனாயிட்டான். இந்த தேவர்களுக்கு வேற வேலையே இல்லையா? அந்தரத்துல ஆளாளுக்கு ஒரு கடையப் போட்டுட்டு என்னா அக்கப்போர் பண்றானுங்க?
(அது சரி, வானத்துல இருந்து சத்தம் வருமா? ஏன் வராது? புதிய ஏற்பாட்டுல இயேசுவுக்கு யோவான் ஸ்நானகன் ஞானஸ்நானம் பண்ணவுடனே மட்டும் வானத்துல இருந்து சத்தம் வந்ததுல்ல?  அப்பிடித்தான்னு வச்சிக்கங்களேன்)
தான் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சத்தியம் பண்ணி எனக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வைக்கிறானேன்னு மகனை நினைச்சி சந்தோஷப்பட்ட சாந்தனு "மவனே பீஷ்மா, I am so proud of you. நீ எப்ப விரும்புறியோ அப்பதான் உன் உயிர் பிரியும்" அப்பிடின்னு சாந்தனு மகன் பீஷ்மனுக்கு வரம் குடுக்குறான். (வரம்ன்னா சாமிதானய்யா குடுக்கும்? இங்க இவன் குடுக்குறான்? சரி போகட்டும், எவங்குடுத்தா என்ன?)
************
அடுத்து சாந்தனு-சத்யவதி கல்யாணம் நடக்குது. சட்டுபுட்டுன்னு ஆகுறத பாப்போம்னு களத்துல இறங்குறான் சாந்தனு. ரெண்டு குழந்தைகளும் பிறக்குது. பர்ஸ்ட் சித்ராங்கதன், செகண்ட் விசித்ரவீரியன். சித்ராங்கதன் ஒரு டென்சன் பார்ட்டி, எப்ப பாத்தாலும் எரிஞ்சி எரிஞ்சி விழுவான்.  விசித்ரவீரியன் ஒரு நோஞ்சான் பார்ட்டி. ஆஸ்பத்திரியே கதியா கிடக்குறான். இவன் நிலைமைய நினைச்சு நினைச்சு ஒரேயடியா போய்ச் சேர்ந்துட்டான் சாந்தனு. (போயிட்டியா!)
சத்யவதியோட பிள்ளைங்க ரெண்டுபேரும் சின்னப்பசங்க. அதனால யாருக்கும் முடிசூட்டாம பீஷ்மன் குருட்சேத்திர நாட்டோட மேனேஜ்மென்ட் பாத்துக்குறான். சித்ராங்கதன் பெரிய பையனா வளர்ந்த உடனே அவனை மன்னனாக்குறான்.
இப்ப ஒரு டர்னிங் பாயின்ட். என்னன்னா, வானத்துல (ஆமாங்க வானத்துல தான்) ஒரு கந்தர்வன்(?), அவம்பேரும் சித்ராங்கதன். "என் பேர்ல இன்னொருத்தனா? அவனைக் கொல்லாம விட மாட்டேன்"னு கிளம்பி வந்து, காட்டுல சிவனேன்னு வேட்டையாடிட்டு இருந்த மன்னன் சித்ராங்கதனை கொன்னே போட்டுட்டான் (ஏண்டா, பேரு வச்சது குத்தமாடா?)
வேற என்ன பண்றது? திரும்பவும் நாட்டை மேனேஜ்மென்ட் பண்றான் பீஷ்மன். நோஞ்சான் விசித்ரவீரியன் பெரிய பையனா வளர்ந்த உடனே அவன மன்னனாக்குறான்.
தல விசித்ரவீரியன் பெர்மனன்ட்டா ஆஸ்பிடல்ல அட்மிட் ஆகிட்டு அப்பப்போ அரண்மனைக்கு வருவான். அதனால பீஷ்மன் தான் திரும்பவும் நாட்டோட மேனேஜ்மென்ட்.
மன்னன் விசித்ரவீரியனுக்கு பேர்ல தான் வீர்யம். ஆனா விசயம் ஒண்ணுமில்ல. எப்ப பாத்தாலும் ஆஸ்பத்திரி தான். பேசாம இந்தப் பயலுக்கு கல்யாணம் பண்ணிவச்சா உடல்நிலை முன்னேறும்னு அவங்கம்மா சத்யவதி யோசிக்குறா. (பாத்தீங்களா, அப்பவே இப்பிடித்தான் யோசிச்சிருக்காய்ங்க)
யோசிச்சா மட்டும் போதுமா? உடனே எந்தெந்த நாட்டு மன்னனுக்கெல்லாம் கல்யாண வயசுல இளவரசி இருக்காங்களோ, அந்தந்த நாட்டு மன்னனுக்கெல்லாம் பொண்ணு கேட்டு ஓலை அனுப்பச் சொல்றா ராஜமாதா சத்யவதி.
ஓலை கிடைச்ச மன்னர்ஸ் எல்லாம் நோஞ்சாம்பயலுக்கு பொண்ணு குடுக்க விரும்பாம, அவங்கவங்க பொண்ணுகளுக்கு வேறவேற எடத்துல அவசர அவசரமா மாப்பிள்ளை பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க.
**********
அப்போ காசியை ஆண்ட மன்னனுக்கு அம்பா, அம்பிகா, அம்பாலிகான்னு மூணு பொண்ணுங்க. மூணு பேருக்கும் சுயம்வரம் நடத்த எல்லா ராஜாக்களுக்கும் இவன் ஒருபக்கம் ஓலை அனுப்புறான் காசி மன்னன். (இது ஓலை வாரம்)
ஆனா  அஸ்தினாபுரத்துக்கு மட்டும் அவன் ஓலை அனுப்பல. சுயம்வரத்துக்கு அந்த நோஞ்சாம்பய விசித்ரவீர்யன் வந்துருவானோ? வந்தா ஒன்னும் சொல்லமுடியாது. மூணு பொண்ணுங்கள்ல யாராச்சும் ஒருத்தி அவன் கழுத்துல மாலையப் போட்டுட்டா திருமணம் பண்ணி வச்சாகணும். ஆனா பொண்ணு வாழ்க்கை வீணாயிருமோன்னு காசி மன்னனுக்கு ஒரு பயம். அதனால அஸ்தினாபுரத்துக்கு ஓலை அனுப்பாம விட்டுட்டான்.
என்ன ஒரு அவமானம்? சத்யவதி பீஷ்மனைக் கூப்பிட்டு இதுக்கு பழிக்குப் பழி வாங்கணும். நீ உடனேபோயி காசி மன்னனோட மூணு பொண்ணுங்களையும் தூக்கிட்டு வான்னு சொல்றா. (பாத்தீங்களா, பொண்ணைத் தூக்கிட்டு வர்ற பழக்கத்தையும் அப்பவே ஆரம்பிச்சிட்டாய்ங்க)
பீஷ்மன் தயங்குறான். நானோ ஒரு பிரம்மச்சாரி. ஒன்னா ரெண்டா, மூணு பொண்ணுங்களைத் தூக்கிட்டு வந்தா என் பிரம்மச்சரிய விரதம் என்னாகும்னு தயங்குறான்.
பழிக்குப் பழி, இது என் உத்தரவுன்னு சத்யவதி சொல்லிட்டா. வேற வழியில்லாம வில் அம்பெல்லாம் எடுத்துக்கிட்டு ரதத்துல தனி ஆளா கிளம்புறான் பீஷ்மன்.
*****
(ஒட்டுமொத்த உலகமும் பாரதம் என்றே அழைக்கப்பட்டது. அதை சூரியவம்சமும், சந்திர வம்சமும் ஆண்டதுன்னு சொல்லிட்டு எந்த அண்டைநாட்டு மன்னர்களுக்கு எப்படி ஓலை அனுப்பமுடியும்? கன்பீசன்.)
ரொம்ப கேள்வி கேட்டீர்ன்னா பொங்கல் கிடைக்காது. சிந்திக்கிறதெல்லாம் உம்ம வேலை இல்லைங்காணும்.
----
படம்: சாந்தனு & சத்யவதி
ரவிவர்மனின் ஓவியம்

Write a comment ...

Sankar Srinivasan

Show your support

Support me to contribute more.

Write a comment ...

Sankar Srinivasan

Certified Market Professional of National Stock Exchange of India